Tuesday, August 10, 2010

அரசியல் வாதியும் அவர் வளர்த்த பூனையும் - நவீன விருட்சத்தில் வெளியானக் கவிதை

30.5.10


பூனைகள்...........பூனைகள்................பூனைகள்......25





அரசியல் வாதியும் அவர் வளர்த்த பூனையும்
அரசியல்வாதி
ஒரு பூனை வளர்த்தார்
அன்றாடம் பாலுடன்
அனுசரணையாய்
வளர்க்கப் பட்டது
அந்தப் பூனை
அவர் மடியில் கிடந்து
மாமிசம் சாப்பிட்ட
பூனை அது.

அரசியல்வாதி
எம். எல். ஏ ஆனார்.
எம். பி ஆனார்.
மத்திய மந்திரியும் ஆனார்
பூனைக் காவல்படையுடன்
சுற்றும் அவர் அருகே
இன்று அந்த பூனையால்
அண்ட இயலவில்லை

அரசியல்வாதியின் மனைவியாய்
நெடுங்காலம் இருந்த பின்
ஒரே நாளில் திடீரென
முதல் மனைவியாய்
பதவி உயர்வு பெற்ற
அந்தப் பெண்ணின்
சமையல் அடுப்பில்
தூங்குகிறது
இன்று அந்த பூனை


குமரி எஸ்.நீலகண்டன்..

No comments: