Thursday, May 19, 2011

அறியாப் பிறவி - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

அறியாப் பிறவி
குமரி எஸ். நீலகண்டன்

நான் கோபக்காரன்
கொலைகாரன்
காட்டுச் சிங்கமென்று
எனது கவிதை
நாயகனுக்குத் தெரியாது.

அப்பாவியாய்
அபகரிக்க வல்லவனாய்
எண்ணி என்னை
அன்றாடம் அலைக்கழிக்கும்
சூன்யக்காரனான
அவனறிய மாட்டான்
நான் அவனை
அவ்வப்போது எழுத்தால்
கண்டந்துண்டமாய்
வெட்டிப் பிளப்பதை.

பாவம் அவன்
என் கவிதைகளைப்
படிப்பதில்லை.
கவிதைகளும்
அவனுக்குப் பிடிப்பதில்லை.