Thursday, January 27, 2011

அவனைத் தின்ற புழு - உயிரோசையில் வெளியான கவிதை

அவனைத் தின்ற புழு
குமரி எஸ். நீலகண்டன்

அவன் புத்தகத்தை
பக்கம் பக்கமாய் சாப்பிட்டு
வண்ணச் சிறகுகளுடன்
பட்டாம் பூச்சியாய்
பறந்து கொண்டிருந்தான்.

அவனது அந்தக்
குறிப்பிட்ட புத்தகத்தை
நாலைந்து புழுக்கள்
நாலே வாரங்களில்
ஒவ்வொரு எழுத்தாய்
தின்று தீர்த்து
அடுத்த புத்தகத்துள்
கன்னமிட்டு
அவனையும் முந்தி
அள்ளித் தின்னத்
தொடங்கின.

புழுக்களின்
அத்து மீறியக் குடியிருப்பை
அங்கேக் கண்ட
அவனின் தலைக்குள்
ஆயிரமாயிரமாய் புழுக்கள்
அவன் தலையையும்
தின்னத் தொடங்கி இருந்தன.