Monday, April 18, 2011

மெய்யும் பொய்யும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

மெய்யும் பொய்யும்
குமரி எஸ். நீலகண்டன்

பொய்யே
நெய்யாய் எரிய
உடலெங்கும்
பொய்யின் வியர்வையில்
புதைந்தவன் அவன்.

எப்போதும் பொய்யே
பேசும் அவன்
எப்போதாவது
உண்மை பேசுகையில்
பொய்யாய் போகும்
அவன் உருவமெனும்
மெய்.