Wednesday, February 16, 2011

என்னுள் ஒருவன் கவிதை குறித்து...

என்னுள் ஒருவன் கவிதை  குறித்து நண்பர் திரு.டோக்ரா அவர்களின் விமர்சனம்
எனது என்னுள் ஒருவன் என்ற கவிதையின் விமர்சனத்தோடு அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் நண்பர் திரு. டோக்ரா அவர்கள் அவரது கவிதை விமர்சனம் என்ற வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மீண்டும். அதற்கான இணைப்பு இதோ

நீலகண்டன் கவிதைகள் விமர்சனம் -2

நீலகண்டன் கவிதைகள் விமர்சனம் -2


நீலகண்டன் எழுதிய கவிதை “என்னுள் ஒருவன்” வார்த்தைகளுடன் அழகாக விளையாடி நம்மைப் பற்றியே நாம் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பதால் நாம் மற்றவர்கள் கண்ணோட்டத்துடன் உலகத்தைப் பார்க்க இயலாமல் போய்விடுவதை எடுத்துரைக்கிறது.

மனித மனம் அதன் எல்லை விளிம்புகளைத் தாண்டி விரிவாக வாய்ப்புகள் இருந்தும், நம்முடனான நமது ஈடுபாடு நம்மை மற்றவர்களைப் பற்றி சிந்திக்க அனுமதிப்பதில்லை. நமது மனம் விரிவு பெற நாம் சற்று நேரம் நம்மை மறந்து உலகத்தை மற்றவர்கள் கண்ணோட்டத்துடன் காணக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் மனத்தில் வசிக்கும் “நான்” என்பவன் மனமாகிய இல்லத்தை விட்டுச் சென்று அங்கே இன்னொருவர் வந்து வசிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் “நான்” என்பவரின் தலையீட்டு இல்லாமல் இன்னொரு கண்ணோட்டத்தில் உலகத்தைப் பார்ப்பது சாத்தியமாகும். மேலதிகாரிக்குத் தனக்குக் கீழ் பணிபுரிபவரின் கஷடங்கள் புரியும்; கீழ் பணி புரிபவருக்கு மேலதிகாரியின் கவலைகள் தெரியும். மாணவன் ஏன் படிப்பில் அக்கறை காட்டவில்லை என்பதை ஆசிரியர் புரிந்து கொள்வார்; தான் நன்றாகப் படிக்காததால் ஆசிரியர் ஏன் கோபப்படுகிறார் என்பது மாணவனுக்குப் புரிந்துவிடும்.
இந்தச் சிறந்த கவிதை தமிழ் மொழி தெரியாதவர்களுக்குப் போய்ச் சேர இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளேன். இதோ அந்த கவிதை:

என்னுள் நானும்
உன்னுள்
நீயுமில்லாத போது
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
சாவகாசமாய்
உரையாடுகிறோம்…


என்னுள் நானில்லாத போது
பலருள் எனக்கும்
என்னுள் பலருக்கும்
இடமிருக்கிறது.


என்னுள்ளிருந்து
வெளியேறும் நான்
வெகு அருகிலும்..
சில நேரம் விலகியும்
மறைந்தும்
சில நேரம் வெகு
தூரத்திலிருந்தும்
வெகு அருகில் வந்தும்
அச்சுறுத்திக்
கொண்டிருக்கிறது.


என்னை அறியாமல்
என்னுள் புகுந்து
உச்சியிலாடி உட்கலகம்
செய்கிறது..


ஆயிரம் கைகளிலும்
ஆயுதங்கள் தாங்கி
அகத்திலிருந்து
கைகளைச் சுழற்றும்
அதன் ஆர்ப்பாட்டத்தில்
இலக்கு எதிரானாலும்
இழப்பு எனக்கே எனக்கு.


நானின் கையிலுள்ள
நாணின் சுருக்கில்
தலையை ஈர்க்கும்
என்னுள்
நானில்லாத போது
என்னுள் பலருக்கும்
பலருள் எனக்கும்
பட்டாம் பூச்சியாய்
பறக்க இயல்கிறது.


எனக்கே எதிராய்
எப்போதும்
எனது நான்…..


Here is a translation of the above poem in English:

When I am not
Within me
And you are not
Within your self
Then
I within you
And you within me
Are able to relax and talk.


When we do not
Occupy our selves
Then our self
Is able to accommodate many
And expand. 


Whenever I leave my self
I constantly threaten
To come back
Whether from afar
Or close
And disturb others
Who occupy me then. 


I become
Like a demon
Threatening to come back
Carrying weapons in all hands
Jutting out from my Ego —
Weapons that
While they are aimed at others
Cause me damage.


When the string
That pulls me within my self
Is let loose
And I do not occupy my self
Then
I within others
And others within me
Flutter around
Like colourful butterflies. 


The one who hinders me always
Is my “I – ness”.


3 Responses to நீலகண்டன் கவிதைகள் விமர்சனம் -2


  • Dr.k.S.J.Wilson says:
    Really It is a very loveable Poem. As others says every body in the world should read it and understand themselves. The lines reflect that the poet as a genius person. It is the most essential one in todays life style. I wish to give more poems like this



  • dogrask says:
    Thanks Dr. Wilson. This blog is intended to popularise good Tamil poetry. That is why I have nick-named it “தமிழ் கவிதைக்கு என் தொண்டு”.
    I appreciate your valuable comment.



  • //என்னுள் நானில்லாத போது
    பலருள் எனக்கும்
    என்னுள் பலருக்கும்
    இடமிருக்கிறது.//
    இந்த நான்கு வரிகளுக்குள் எல்லாமே அடங்கியுள்ளன.
    நல்லதொரு கவிதைக்கு சிறப்பான அங்கீகாரம் தந்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.




  •