Friday, August 5, 2011

நிலா மொழி - வல்லமை இதழில் வெளியான கவிதை

நிலா மொழி
குமரி எஸ். நீலகண்டன்

எனது அம்மாவுடன்
நான் களித்த எனது
அம்புலிப் பருவத்திலிருந்தே
உன்னைக் காண்கிறேன்...
இன்றும் நீ
அப்படியே இருக்கிறாய்
என்றேன் நிலாவைப்
பார்த்து வியந்து...

அதற்கு நிலா சொன்னது
நாற்பது ஆண்டுகளாய்
நானும் உன்னைக்
காண்கிறேன்..
அப்போது போலில்லை
நீ இப்போது.
மிகவும் மாறி
விட்டாய்.. என்று
வருத்தத்துடன்
சொன்னது..

இன்னும் சொன்னது...
நான் மாறி விட்டாயென்று
சொன்னது உன்
உருவத்தை மட்டுமல்ல...
என்றது குறிப்பாய்.