Monday, January 31, 2011

மேகத்தின் பன்முகங்கள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

மேகத்தின் பன்முகங்கள்
குமரி எஸ். நீலகண்டன்

காற்றில் மிதக்கும்
பஞ்சாய்
வானில் மேகம்.

பயணிக்கும் பறவைகளின்
சீரிய சிறகசைவில்
சிலிர்த்து வியந்து...

மலையரசனின் தலையில்
மகுடமாய் ....

நிலத்திற்கும் கடலுக்கும்
விரிந்த
வெண்குடையாய்

கிழித்தெறிந்த பஞ்சில்
கிளர்ந்தெழுந்த வேகத்துடன்
மேகம்.

வானம் அழுகையில்
கருங்கூந்தலை விரித்து
இடியாய் கர்ஜிக்கிற
இறுமாப்புடன் மேகம்.