Friday, March 2, 2012

இருளில் உருளும் மனம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

இருளில் உருளும் மனம்
குமரி எஸ். நீலகண்டன்


இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.

வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.