Saturday, June 22, 2013

ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது விழாப் படங்கள்

பதிப்புச் செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளை விருது விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. மெய்யப்பன் அறக்கட்டளைத் தலைவர் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், சிலம்பொலி செல்லப்பனார், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் அவ்வை நடராசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.பா. அறவாணன், எழுத்தாளர் ராசேந்திர சோழன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழறிஞர் பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன், கவிஞர் பொன் செல்லமுத்து, கவிஞர் பல்லடம் மாணிக்கம், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், எழுத்தாளர், பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், பால சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் கமலவேலன் உட்பட பல அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாப் படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,



Thursday, June 20, 2013

ஆகஸ்ட் 15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது....

 மணி வாசகர் பதிப்பகத்தின் சார்பில் பதிப்பகச் செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளையின் 2012 ஆம் ஆண்டின் சிறந்த நூலாக எனது ஆகஸ்ட்15 நூல் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருது நாளை வழங்கப்பட இருக்கிறது. விழா அழைப்பிதழை இத்தோடு இணைத்துள்ளேன்... விழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

மிக்க அன்புடன்
குமரி எஸ்.நீலகண்டன்