Sunday, August 22, 2010

ஏக்கம் - தாமரை இதழில் வெளியான கவிதை

ஏக்கம்

குமரி எஸ்.நீலகண்டன்..

வெறும் கண், காது
மூக்கு மட்டுமல்ல
என் உருவம்.

என் தோற்றத்தைக்
காட்ட முயன்று
தோற்றுப் போகிறேன்
அவர்கள்
அவரவர் கண்களில்
என்னைப் பார்ப்பதால்.

அவர்கள் பார்த்த
என் உருவம்
என்னைப் போலவா
அவர்களைப் போலவா..

வரையச் சொல்லுங்கள்
ஓவியமாய்...
அவற்றில் ஒன்றாவது
என்னைப் போல்
நானாய்.