Tuesday, December 13, 2011

ஒரு உண்ணாவிரத மேடையில் - திண்ணை இதழில் வெளியான கவிதை

ஒரு உண்ணாவிரத மேடையில்
குமரி எஸ். நீலகண்டன்

மரண தண்டனையை
எதிர்த்தும் மனித
உரிமைகளுக்காகவும்
உண்ணாவிரதமிருந்தான்
அவன்.

எந்த உயிரைக்
கொல்வதற்கும்
மனிதனுக்கு உரிமை
இல்லையென்றே
முழங்கினான்.

அவனைக் கடித்துக்
கொண்டே இருந்த
கொசுக்களை
அடித்து அடித்து
இதையெல்லாம்
சொல்ல வேண்டி
இருக்கிறது அவனுக்கு.