ஊனப் பிள்ளையார்
குமரி எஸ். நீலகண்டன்
அடுக்கு மாடிக் குடியிருப்பின்
கீழ் தளத்தின் குறுஞ்சுவரில்
கையொடிந்த பிள்ளையார்
அண்டுவார் யாருமின்றி....
பட்டினியாய்... பரிதாபமாய்...
இரண்டு தினம் முன்பு
ஆறாவது மாடி
அனந்த நாராயணன்
வீட்டுப் பூஜை அறையில்
புஷ்டியான கைகளுடன்
பருத்த வயிறோடு
மோதகப் பாத்திரத்துடன்
பார்த்த நினைவு.
குமரி எஸ். நீலகண்டன்
அடுக்கு மாடிக் குடியிருப்பின்
கீழ் தளத்தின் குறுஞ்சுவரில்
கையொடிந்த பிள்ளையார்
அண்டுவார் யாருமின்றி....
பட்டினியாய்... பரிதாபமாய்...
இரண்டு தினம் முன்பு
ஆறாவது மாடி
அனந்த நாராயணன்
வீட்டுப் பூஜை அறையில்
புஷ்டியான கைகளுடன்
பருத்த வயிறோடு
மோதகப் பாத்திரத்துடன்
பார்த்த நினைவு.