Saturday, October 30, 2010

செய்தியும் கவிதையும் - ஆணுறையில் நவரத்தினங்கள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

செய்தியும் கவிதையும்


ஆணுறைக்குள் நவரத்தினங்கள்

குமரி எஸ். நீலகண்டன்

(நவரத்தினக் கற்களை ஆணுறைக்குள் வைத்து விழுங்கி, கடத்திய இலங்கை வாலிபர் சென்னையில் கைது என்ற செய்தியின் எதிரொலியாக எழுந்த படைப்பு)

நவரத்தினங்கள்

நவதானியங்களுக்குப் பதில்
நவரத்தினங்களை
உண்ணும் குருவிகள்.


நவரத்தினம் உண்ணும்
நாகராஜர்.


ஆணுறை இவருக்கு
மட்டுமல்ல இவரின்
நவரத்தினங்களுக்கும்
பாதுகாப்பாம்.


அவரோடு அவரின்
நவரத்தினங்கள்
வந்த வழியும் தனிவழி.


கழிவுகளை நோக்கி
கழிவுகளோடு வந்த
நவரத்தினங்கள்.