Monday, December 27, 2010

காரணமெனும் ரணம்

காரணமெனும் ரணம்
குமரி எஸ். நீலகண்டன்

ஈருளி வாகனத்தில்
இயங்கிய அவன்
சாலைப் பூசணியில்
சரிந்து விழுந்தான்.
தலையெங்கும்
பூசணிக்குள்
புதைத்த குங்குமமாய்
சிகப்பு சித்திரங்கள்.
ஆஸ்பத்திரியில் அவனின்
அம்மா சொன்னாள்
எல்லாம் அவனுக்கு
திருஷ்டி கழிக்காததால்
நேர்ந்ததென்று.