Tuesday, January 18, 2011

நெருப்பு மலர் - திண்ணை இதழில் வெளியான கவிதை


நெருப்பு மலர்
குமரி எஸ். நீலகண்டன்
எரியும் காகிதத்தில்
அசையும் இதழ்களுடன்
அழகாக
ஆடியதொரு சிகப்புப் பூ..
கருப்பு வாசம். 


தொட இயலவில்லை
தோட்டமெதுவும் இல்லை
வண்டு மொய்க்கவில்லை
இதழ்கள் உதிரவில்லை
இறுதியில் மண்ணில்
கருப்பு மகரந்தங்கள்