Saturday, February 26, 2011

ஒரு கவிதானுபவம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

ஒரு கவிதானுபவம்
குமரி எஸ். நீலகண்டன்

எல்லாக் கவிதைகளிலும்
எங்கோப் பார்த்த முகம்
கேட்ட எள்ளல்
உணர்ந்த கோபம்
சுட்ட நெருப்பு
சுருக்கென்று குத்துகிற ஊசி
பரவசித்தப் பசுமை
திகட்டியத் தென்றல்
நகர்த்திய நடையென
கவிதைகளின் அணிவகுப்பில்  
சாயலின் சங்கமத்தில்
சந்திக்காத ஒரு கவிதையை
நான் தேடிக்
கொண்டிருந்த போது
நான் இதுவரை சந்திக்காத
அந்தப் புதியவன்
என்னைத் தட்டி
உங்களை எங்கோப்
பார்த்த மாதிரி
இருக்கிறதென்று
என்னைக் கலைத்துவிட்டுப்
போனான்.