Wednesday, September 14, 2011

நிலவும் காகமும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நிலவும் காகமும்
குமரி எஸ். நீலகண்டன்

அந்த நகரத்தின் நடுவே
ஒற்றை அடையாளமாய்
இருந்த அந்த
பழைய அரசமரமும்
அன்று வெட்டி
சாய்க்கப் பட்டது.

கிளையோடு விழுந்த
கூட்டின் குஞ்சுகளுக்கு
நிலாவைக் காட்டி
நாளை அந்த
கூட்டிற்கு போகலாம்
யாரும் எதுவும்
செய்ய முடியாதென
சமாதானம் கூறி
வாயில் உணவை
ஊட்டிற்று தாயன்போடு
காகம்.