Tuesday, September 7, 2010

தாத்தா தந்த கடிகாரம் - நவீனவிருட்சத்தில் வெளியானக் கவிதை

நவீன விருட்சம்

This Blog
Linked From Here
The Web

5.9.10
தாத்தா தந்த கடிகாரம்
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்



குமரி எஸ். நீலகண்டன்

எனது தாத்தா

இறக்கும் முன் ஒரு நாள்

அவரது ஓடாத

பழைய கடிகாரத்தை

எனக்கு பரிசாக

தந்துவிட்டு போனார்.

தாத்தாவின் இதயம் துடிக்கும்

அதை நான் மிகவும்

பத்திரமாக பாதுகாத்து

வருகிறேன்.

உலகம் போற்றும்

அந்த சிற்பி

தற்போது புதிதாய்

கவிதை எழுத

துவங்கி இருக்கிறார்

கவிதை பக்கம்

செல்லாதவர்களும்

தற்போது அவரது

கவிதையைப்

புகழ்ந்து போற்றுகின்றனர்.

கவிதையே போடாத

பத்திரிகைகளும் தற்போது

அவரது கவிதைக்காக

ஒரு பக்கம்

ஒதுக்கி உள்ளன.

நான் தற்போது அந்த

கவிதைகளையெல்லாம்

ஒரே ஒரு தடவை மட்டும்

படித்துவிட்டு

தாத்தா தந்த

அந்த கடிகாரத்தின்

அடியில் வைத்து

பாதுகாத்து வருகிறேன்

குமரி எஸ். நீலகண்டன்