Tuesday, November 29, 2011

மரம் பெய்யும் மழை - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

மரம் பெய்யும் மழை
குமரி எஸ். நீலகண்டன்

மழை பெய்யத்
தொடங்கியதும்
மரம் பெய்யவில்லை
மழையை...

மழை நின்று
வெகு நேரமாகியும்
மரம் பெய்து
கொண்டே இருக்கிறது
மழையை பெரிய
பெரியத் துளிகளுடன்.

பூப்பெய்த மரங்கள்
பூ பெய்கின்றன
மழையோடு.
பூப்பெய்தாத மரங்கள்
இலைகளைப் போட்டு
விளையாடுகின்றன
போகும் நீரில்..