Friday, September 23, 2011

நிலாவும் முதலையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நிலவும் குட்டி முதலைகளும்
குமரி எஸ். நீலகண்டன்

சலனமற்ற இரவில்
சல்லாபமாய்
மிதந்து கொண்டிருந்தது
பிறைநிலா
அந்தப் பெரிய குளத்தில்...


குத்து வாள் போலிருந்த
அதன் கூர்பகுதிகளிரண்டிலும்
குட்டி முதலைகள் தனது
முதுகைச் சொறிந்து
கொண்டன.