Saturday, August 13, 2011

நிலாக் காவல் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நிலாக் காவல்
குமரி எஸ். நீலகண்டன்

நடந்து கொண்டே
இருந்தேன். என்னைத்
தொடர்ந்து கொண்டே
இருந்தது நிலா.

இரவின் தனிமை
என்னை
அச்சமூட்டவில்லை...
நடந்த தூரங்கள் முழுக்க
தொடர்ந்து உரையாடிக்
கொண்டே வந்தது நிலா...

நான் நுழைந்த
அந்த வீட்டிற்குள்
மட்டும் நுழையவில்லை
அந்த நிலா..

எவ்வளவு நேரம்
எனக்காக வெளியே
காத்திருந்ததோ
எனக்குத் தெரியவில்லை...