Friday, March 2, 2012

இருளில் உருளும் மனம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

இருளில் உருளும் மனம்
குமரி எஸ். நீலகண்டன்


இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.

வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.

6 comments:

ராமலக்ஷ்மி said...

வெளிச்சமும் இருளும் சேர முடியாததாக..

அருமையான கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி..

ஸ்ரீராம். said...

நல்ல கவிதை. ஏன் நீண்ட இடைவெளி?

குமரி எஸ். நீலகண்டன் said...

இன்னொரு முக்கியமான நூலொன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சிலக் கடமைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே ஆக வேண்டி இருக்கிறது. அந்த கடமைகளை முடிக்காமல் நான் எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லை... மிக்க நன்றி ஸ்ரீராம்... வலைப்பூவில் பகிராமலிருந்த இடைவெளியில் நாம் எழுத்தில் உரையாட இயலாமல் போகிறது. அது ஒரு பேரிழப்புதான் எனக்கு.