Tuesday, November 8, 2011

காணாமல் போனவர்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை


காணாமல் போனவர்கள்
குமரி எஸ். நீலகண்டன்
மரத்தில்
தன்னந்தனியாய்
அழகான
ஒரு பறவையைப்
பார்த்தேன்.
முகமலர அதோடு
ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்த
நிலவையும் பார்த்தேன்.


எதிர்பாராமல்
ஒரு மின்னல்
கிழித்த துணியாய்
மேகத்தை கிழிக்க...


பேரிடி முழங்கியது.
பெருமழை பெய்தது.
பேசிக் கொண்டிருந்த
பறவையையும்
காணவில்லை.
நிலவையும்
காணவில்லை.
எங்கே போனதோ
அவைகள்.

9 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

//எதிர்பாராமல்
ஒரு மின்னல்
கிழித்த துணியாய்
மேகத்தை கிழிக்க...
//

ரசித்தேன். வாழ்த்துக்கள்

குமரி எஸ். நீலகண்டன் said...

சக்தி பிரபா அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

ஸ்ரீராம். said...

அருமை.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ஸ்ரீராம்...

ராமலக்ஷ்மி said...

அருமை. நிச்சயம் கிடைப்பார்கள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

ராமலக்ஷ்மி said...

வலையோசை-அதீதம்

நல்வாழ்த்துக்கள்!