Friday, November 5, 2010

தீபாவளி சிந்தனைகள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

தீபாவளிச் சிந்தனைகள்

குமரி எஸ். நீலகண்டன்

வருடந்தோறும்
வருகிறது தீபாவளி.

வெடிகளைக் கொண்டு
ஆடுகிறார்கள்.
விழாக் கொண்டாடுகிறார்கள்

ஓலை வெடி, குருவி வெடி,
குத்து வெடி, லக்ஷ்மி வெடி,
அணு குண்டு, ராக்கெட்டென
ஆகாயம் அதிர இடியாக
ஒளி முழக்கம்.

முழங்கும் ஒலியில்
முகம் தெரியாமல்
சில முனங்கல்கள்.

வானத்தில் அதிரும்
வெடிகளைப் பார்த்து
பறவைகள் தமது
குஞ்சுகளிடம்
என்ன சொல்லும்?

தெருவில் வெடிக்கும்
வெடிகுண்டுகளுக்குப் பயந்து
ஒளிந்துகொள்ளும் நாய்கள்
மனத்தில் என்ன
நினைத்துகொள்ளும்?

அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு
வாழ்த்துகள் எழுதும் போது
என்ன நினைத்துக்கொண்டு
எழுதி இருப்பார்கள்?

கரிந்து போன
வெடிகளைப் பொதிந்த
பாலகர்களின் கரங்கள்
எப்படி இருக்கின்றன?

No comments: