Friday, June 17, 2011

மனவழிச் சாலை - திண்ணை இதழில் வெளியான கவிதை

மனவழிச் சாலை
குமரி எஸ். நீலகண்டன்

கவலைகள்
அவ்வப்போது கடுகாகவும்
கடுஞ்சீற்றத்துடனும் வரும்...

அதன் வருகையின்
அடையாளமாய் மனதில்
சிறு குழிகளும்
பெருங்குண்டுகளுமாய்
இருக்கும்...

எதிரே வருபவர்களெல்லாம்
அதில் தடுக்கி விழலாம்.
குழிகளையும் சாலையையும்
பொறுத்து காயங்களும்
ஏற்படலாம்.

மிகச் சிலரே அதில்
தண்ணீர் ஊற்றி
குழிகளை நிரப்பி
செடி வளர்த்து
அதில் ஒரு பூ
பூப்பது வரை கூடவே
இருந்து பராமரிப்பர்...

ஆனாலும் அவனுக்கு
அவன் மனதானது
எப்போதும்
அர்ப்ப ஆயுளுடன்
சீர் செய்யப் படுகிற
தார் சாலையாய்
குண்டும் குழியுமாய்.

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மனதில் காயப்படாமல் வாழ்க்கை நகர்த்துவது கொஞ்சம் கடினம்தான்..

ராமலக்ஷ்மி said...

உண்மைதான். தவிர்க்க முடியாதது.

நல்ல கவிதை.

கே. பி. ஜனா... said...

அந்த மிகச் சிலரில் ஒருவனாக அவன் ஆவது எப்போது? மனதைத் தொடுகிறது கவிதை!

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி கவிதை வீதி சௌந்தர் அவர்களே உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது..

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி

குமரி எஸ். நீலகண்டன் said...

கே.பி. ஜனா சார்.. மிக்க நன்றி...\அந்த மிகச் சிலரில் ஒருவனாக அவன் ஆவது எப்போது?\ அது அவனைத்தான் கேட்க வேண்டுமென எண்ணுகிறேன்.