வருடச் சங்கடம் - வல்லமை இதழில் வெளியான கவிதை
வருடச் சங்கடம்
குமரி எஸ். நீலகண்டன்
அப்பா அம்மாவோடுதான்
அவனது ஒவ்வொரு
பிறந்த நாளும்.
கேக் வெட்டி
மெழுகுத் திரிகள் ஒளிர
வருடம் தவறாமல்
கொண்டாடி வருகிறான்.
வருடந்தோறும்
மெழுகுத் திரிகளோடு
அவன் வயதும்
பெருகப் பெருக அவனது
அப்பாவும் அம்மாவும்
அதே இளமையில்
புகைப்படத்தில்..
4 comments:
அருமை அருமை.....!!!
மிக்க நன்றி நாஞ்சில் மனோ....
அருமை. தவிர்க்க முடியாத காலச் சுழற்சி.
நன்றி ஸ்ரீராம் உங்கள் அன்பிற்கும் வருகைக்கும்
Post a Comment