Monday, May 2, 2011

இலையின் முனங்கல் - வல்லமையில் வெளியான கவிதை

இலையின் முனங்கல்
குமரி எஸ். நீலகண்டன்

ஒவ்வொருவரும்
செடியின் இலையைக்
கிள்ளி எறிகிற போதும்
இலை சொல்லுகிறதாம்
உங்களுக்கு
குழந்தைகள் என்று
இருந்தால்
பாவம் அதை
பார்த்து கிள்ளுங்கள் என்று,,,

6 comments:

ராமலக்ஷ்மி said...

//ஒவ்வொருவரும்
செடியின் இலையைக்
கிள்ளி எறிகிற போதும்//

இலை சொன்ன சேதி இன்னும் எத்தனையோ விஷயங்களுக்கும் பொருந்துகிறதே. மிக நல்ல கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

Yaathoramani.blogspot.com said...

அருமை
வலி அறிந்தவன்
அது நம்மோடு போகட்டும்
என்பது மாதிரியா?
அசத்தல் கவிதை
தொடர வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

இலையின் மென்மை அபபடி சொல்லுமளவு கூட அதை அனுமதிக்காது என்று நினைக்கிறேன்!

குமரி எஸ். நீலகண்டன் said...

ரமணி... ஸ்ரீராம்.... உங்களுக்கு என் அன்பு வணக்கங்களும் நன்றிகளும்

Anonymous said...

very nice. i like it