Friday, April 8, 2011

பவளமல்லியின் பட்டு சிரிப்பு - வல்லமை இதழில் வெளியான கவிதை

பவளமல்லியின் பட்டுச் சிரிப்பு
குமரி எஸ். நீலகண்டன்

நான் ஒவ்வொரு முறை
செல்கிற போதும்
அந்த பவளமல்லி மரம்
பழுப்பு வண்ணச் சேலையுடன்
குலுங்கி குலுங்கிச்
சிரிக்கிறது.
அதன் சிரிப்பலைகள்
மரத்திலிருந்து சிந்திச் சிதற
அதன் முகமும்
வெள்ளைச் சிரிப்பும்
பவளமணிகளாய் பரந்து
தரை முழுக்க.......

விரிந்த தரையில்
விழுந்த சிரிப்பில்
பெருமிதமாய் முகம்
பார்க்கிறது
அந்த செந்தரை.

2 comments:

ராமலக்ஷ்மி said...

பவளமல்லிகளின் பட்டுச் சிரிப்பு கவிதையின் வரிகளுக்கிடையிலும்..

பெருமிதம் கொள்ளலாம் நீங்களும்.

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி ராமலக்ஷ்மி. உங்கள் கருத்தும் எனக்கு பெருமிதம்தான்.