Sunday, October 17, 2010

பூனையின் பிடிவாதம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

15.10.10

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்...




பூனையின் பிடிவாதம்


எழுத எழுத…
எழுத மறுத்தப்
பேனா முனை
காகிதப் பாதையில்
எங்கோத் தட்டிற்று.
ஓடும் மோட்டார் சக்கரத்தில்
சிக்கிய சேலைத் துண்டாய்
பேனா முனையின்
இரு கம்பீர
கம்பங்களைப் பிளந்து
அதற்குள் ஒரு
காகிதத் துணுக்கு.
ஜீரணிக்க இயலாமல்
கக்கிய மைக்குள்
மிதந்து வந்த
ஒரு பூனை
பிடிவாதமாய்
வரைமுறையின்றி கத்திற்று
ஒரு எலியினை
வரை வரை என்று.



குமரி எஸ். நீலகண்டன்

No comments: