Thursday, August 12, 2010

சத்திய பிரமாணம் - சென்னை ஆன் லைனில் வெளியானக் கவிதை

சத்திய பிரமாணம்

 சத்திய  பிரமாணம்

குமரி எஸ். நீலகண்டன்

எனக்குச் சுதந்திரம் வேண்டும்.
ஆனால்
எல்லோரும்
நான் சொல்வதையே
கேட்க வேண்டும்.

எல்லோரும் உழைக்க வேண்டும்.
ஆனால்
எனக்கு வியர்வை ஒவ்வாது.

உதவும் மனதே
உலகை உயர்த்தும்.
எல்லோரும் எனக்கு
உதவுங்கள்.

பாவம்! அவனுக்கு
ஏதாவது கொடுங்கள்!
என்னிடம் மட்டும்
எதுவும் கேட்காதீர்கள்.

உனக்காக உயிரையே
கொடுப்பேன்.
உறுதியாக வாக்கு
தருகிறேன்.

என்னிடம் ஒரு பலஹீனம்
வாக்குறுதிகள் மட்டும்
என் நினைவில்
இருப்பதே இல்லை.

 சத்திய  பிரமாணம்
Jul 21, 2009

2 comments:

dogra said...

அருமையாக இருக்கிறது.

குமரி எஸ். நீலகண்டன் said...

சிந்தனை அவர்களுக்கு மிக்க நன்றி