Friday, October 8, 2010

பிரபுதேவா நயன்தாரா ரகசிய திருமணம் - செய்தியும் கவிதையும்

பிரபு தேவா – நயன்தாரா ரகசிய திருமணம்!

 

ஆறுதலாய் தீண்ட
செஞ்சுடராய் அங்கு
படர்ந்து எரிந்தது
இன்னுமொரு
காதல் தீ.
சுட்டுக் கொண்டது
பழைய காதலும்
பழகிய மரபும்
பரிதாபமாய் குழந்தைகளும்...
இது காதல் தீயா....
குப்பைகளின் நெருப்பா


குமரி எஸ். நீலகண்டன்

Thursday, October 7, 2010

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் - செய்தியும் கவிதையும்

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு



ஆழ்ந்த அறிவால்
அறிவியல் ஆய்வால்
புத்துலகங்கள்
கண்களில் பூக்க
வக்கிரப் பார்வையுடன்
வர்த்தக அசுரர்கள்
எரியும் விழிகளில்
சருகான பசுமை...
குமரி எஸ். நீலகண்டன்

Wednesday, October 6, 2010

மின் திருட்டைத் தடுக்க ஆலைகளில் சோதனை - செய்திக் கவிதை

மின் திருட்டைத் தடுக்க ஆலைகளில் சோதனை: முதல்வர் உத்தரவு

 மின் திருட்டைத் தடுக்க
ஆலைகளில் சோதனையாம்
சோதனையைத் தடுக்க
ஆலையைச் சுற்றிலும்
மின் வேலியாம்
திருடும் மின்சாரத்திற்கு
உருட்டு கட்டைகள்
உட் பாதுகாப்பு.

குமரி எஸ். நீலகண்டன்

Tuesday, October 5, 2010

செய்தியும் கவிதையும்- காவலர் தேர்வில் தில்லுமுல்லு

     
காவலர் உடல் திறன் தேர்வில் தேங்காய் சரட்டை வைத்து வாலிபர் "தில்லுமுல்லு'
சேலம் : சேலத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலருக்கான உடல் திறன் தேர்வில், உயரத்துக்காக தலையில் தேங்காய் சரட்டை வைத்து, "தில்லுமுல்லு' செய்த வாலிபர் மீது, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.




காவல் பணியில்
காதல் அவருக்கு ....
உடற் தகுதிக்கான
உயரம் போதவில்லை.
உயர்மட்ட ஆலோசனைக்குபின்
பொய்முடிக்குள்
கொப்பரை வைத்து
உயரம் கூட்டினான்.
மூளை வளர்ச்சி
போதவில்லையென்று
சிறையில் அடைத்தனர்
அவனை அதிகாரிகள்.
தலையில் தேங்காய்
வைத்தால் தென்னை
மரமாக இயலுமா...

குமரி எஸ். நீலகண்டன்

Monday, October 4, 2010

குடையும் நானும் - நவீன விருட்சத்தில் வெளியானக் கவிதை

This Blog
Linked From Here
The Web
This Blog
 
 
 
 
Linked From Here
 
 
 

The Web
 
 
 

3.10.10

குடையும் நானும்




அலுவலக பயணமாக
நான் சென்ற அந்த ஊர்
எனக்குப் புதிது.
வேலைகளில்
ஒடுங்கிப் போன
என் கண்களுக்கு
அந்த ஊரில்
எதுவுமே தெரியவில்லை.
ஊருக்கு திரும்பும் நேரம்
பெய்த மழையில்
குடையினை விரித்தேன்.
சிதறிய மணலில் நீரின்
சிருங்கார ஆட்டம்
என் கால்களை
கிளுகிளுக்க வைத்தது.
சுற்றிலும் பன்னீரைச்
சொரிந்தது போல்
குடையருவியின் குதூகலம்.

கார் மேக குடையில்
கண்ணாடி மாளிகைக்குள்
கனிந்த மழை ரசத்தில்
களித்த நான்
ரயில் நிலையத்தை
நெருங்கிய போது
கையில் குடை இல்லை.

மழை விட்ட போது
தேநீருக்காக ஒதுங்கிய
கடையில் குடையையும்
விட்டிருக்கிறேன்.
அவசர அவசரமாக
குடைக்காக அந்த
வழியில் திரும்பிய
என் நடையின்
வேகத்தை கண்கள்
கால்களில் கயிறுகளைக்
கட்டி இழுத்தன.
நான் வந்த பாதையில்
உண்மையில் களைந்தது
விரிந்த குடைக்கு அப்பால்
மிதந்த மஞ்சள் மலர்
கூட்டங்கள்.
சில்லென்ற மழையில்
சிலிர்த்துப் பறந்த
சிட்டுக் குருவிகள்..
பதமான மழையில்
மிதமாகப் பறந்த
பட்டாம் பூச்சிகள்.
முரட்டு மீசையுடன்
மயிர்கள் நிறைந்த
உடம்போடு
அரக்கன் போல்
காட்சி அளித்த
தொலைவில் இருக்கும்
அந்த அசுர மலையும்தான்.
களைந்த குடைக்குள்
விரிந்த உலகத்தில்
விளைந்தன கோடானு கோடி
குதூகலங்கள்.

Tuesday, September 28, 2010

தனி மரத்து பூக்கள் - திண்ணையில் வெளியானக் கவிதை

Sunday September 26, 2010

தனிமரத்து பூக்கள்

குமரி எஸ். நீலகண்டன்




கணவனும் குழந்தையும்

ஊரில் இல்லையென்று

தனக்காக சமைக்காத மனைவி.

படிப்பதற்கு யாருமே

இல்லையென்று

தனக்காகவும் கவிதை

படைக்காத கவிஞன் இவர்கள்

இருவருமே சிரித்து சிரித்து

எப்போதும் தனிமையில்

ஆனந்தமாய் அழகழகாய்

படம் வரைந்து

ஆனந்தப்படும் அந்த

மனநிலை பாதிக்கப்பட்டதாக

கூறப்படுகிற வயதான

பாட்டியின் ஓவியங்களை

சிறிது நேரம்

பார்க்க வேண்டும். அல்லது

விளையாட யாருமின்றி

தனிமையில் கரியால்

சுவரில் தீட்டுகிற

குழந்தையின்

கை வண்ணத்தையாவது

காண வேண்டும்.

குமரி எஸ். நீலகண்டன்

Saturday, September 25, 2010

கவிதையின் ஜனனம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நவீன விருட்சம்

22.9.10
கவிதையின் ஜனனம்
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்


படிப்பவர்கள் இல்லையென்றே
எழுதுபவர்களின் கைகள்
எழுத மறுத்தும்
கவிதைகள் அவர்களை
வட்டமிட்டுக் கொண்டே
இருக்கின்றன.
காதில் வந்து வண்டு போல்
சதா ரீங்கரித்து
கொண்டே இருக்கின்றன
கவிதைகள்.
மூக்குகளை மூர்ச்சையாக்குகிற
அளவிற்கு ஊடுருவிப்
பாய்கின்றன
கவிதைகளின் வாசம்.

Friday, September 24, 2010

காலத்தின் கால் நீட்சி - வல்லமை இதழில் வெளியானக் கவிதை

காலத்தின் கால் நீட்சி
Posted by editor on September 22, 2010 in கவிதைகள் | 0 Comment

குமரி சு. நீலகண்டன்




நொடி, நிமிடம், மணி,
நாள், வாரம், மாதம்,
ஆண்டு, நூற்றாண்டென
சங்கத் தமிழ்ப் பெண்ணாய்
சீர் நடை நடந்தும்
காலம் தனது கால்களை
நீட்டி நடப்பது போல்
தோன்றுகிறது.
ஓடும் ரயிலின்
ஜன்னல் திரையில்
ஓடும் காட்சிகளின்
வேகத்தில்
காலத்தின் பிம்பங்கள்
கடந்து செல்கின்றன.


காலத்தின் கால்
பதிவு அவ்வப்போது
அலங்காரம் செய்யப்பட்டு
அர்ச்சிக்கப்பட்டு
அழிக்கப்பட்டு
இன்னொரு பதிவிற்கு
எப்போதும் தயாராக
இருக்கிறது.
காற்று வீசுகிற
திசைகள் நோக்கி
காலம் இழுக்கப்பட்டு
அலைக்கழிக்கப்படுகிறது.


மிருகங்கள், பறவைகள்…
புழுக்கள்.. பூச்சிகள்..
மரங்கள்… இலைகள்..
செடிகள்… மனிதர்கள்…
மலைகள்…என
எல்லோரின் கோபத்தின்
சாபத்தின் மொழிகளை
கைகளால் ஒதுக்கிக்கொண்டு
வேகமாய்
எதிர் நீச்சலிடுகிறது
காலம்.


காட்சிகள் மாறிக்கொண்டே
இருந்தாலும் சலனமற்ற
சங்கீத ரசிகனாய்
போய்க்கொண்டிருக்கிறது காலம்.
காலத்தைக் கைப்பிடித்து
கடந்து போகாதவர்களைக்
களைந்து விட்டுப்
போய்க்கொண்டிருக்கும் காலம்.
எங்கே போகிறது காலம்?
எது வரைப் போகிறது?
வரம்பற்ற இலக்கோடு
வரலாற்றின் சாட்சியாய்
வளர்கிறது காலம்.

Tuesday, September 21, 2010

தங்கப் பெண் - நவீன விருட்சத்தில் பிரசுரமான கவிதை

தங்கப் பெண்
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்


ஃபேன்சி கடையில்
வேலை பார்க்கும் அவள்
அலங்காரமாய் பேசி
கவரிங் நகைகளை
விற்று வீட்டுக்கு
திரும்பும் வழியில்
வழக்கம் போல் அந்த
பெரிய நகை கடையில்
தொங்கும் தங்க
விலைப் பட்டியலைப்
பார்த்தாள். தற்போதெல்லாம்
கிராமின் விலைக்கும்
அவள் எதிர்கால
நம்பிக்கைக்குமான தூரம்
வெகு தொலைவாகி
விட்டதால் அவள்
அந்த கடை வருகிறபோது
குனிந்தே செல்கிறாள்.
அந்த கடையில்
வேலை பார்க்கும்
அந்த பையன்
மிகவும் வருத்தத்தில்
இருக்கிறான் இப்போதெல்லாம்
அவள் தன்னை
பார்ப்பதில்லை என்று.

நவீன விருட்சத்தில் அழகியசிங்கர் அவர்களின் கடிதம்

அன்புள்ள நண்பர்களே,
நவீன விருட்சம் 87-88வது இதழ் தயாராகி விட்டது.

இந்த இதழ் எதிர்பார்த்தபடி 6 மாதம் மேல் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணிக்குமேல்தான் இதழ் குறித்து சிந்திக்க முடிந்தது. அதனால் தாமதம்.

இதழில் கீழ்கண்டவர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதழ் அனுப்ப முகவரிகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நானும் என் எழுத்தும் ஐராவதம்
கையெழுத்து முத்துசாமி பழனியப்பன்
கவிதை நந்தாகுமரன்
யாவரும் கேளீர் அசோகமித்திரன்
துரோகத்தின் கத்தி ஆதி
கிழிசல் சேலை குமரி எஸ் நீலகண்டன்
இலா கவிதைகள் 6 இலா
பழம் புத்தகக் கடை விட்டல்ராவ்
விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
யாருக்காக ப மதியழகன்
G ராமசாமி 60+ ன் புலம்பல்
மூன்று கவிதைகள் அய்யப்பன் மாதவன்
அவளா இது மீனு
ஆறு கவிதைகள் அழகியசிங்கர்
இரு கவிதைகள் விநாயக முருகன்
தமிழ்ப் பேசும் ஆங்கில படம் தாஜ்
பெண் கவிதைகள் மொழிபெயர்ப்பு குவளைக்கண்ணன்
அம்மா மாதிரி செல்வராஜ் ஜெகதீசன்
குற்றச்சாட்டு நீலமணி
மொழிபெயர்ப்புக் கதை எம்.ரிஷான் ஷெரீப்
ஐயப்பப் பணிக்கர் கவிதை
சில குறிப்புகள் அழகியசிங்கர்
கழைக்கூத்தாடிச் சிறுவன் ப மதியழகன்
மைனஸ் மாத்ருபூதம் உஷாதீபன்
வரம் யோசிப்பவர்
ஐராவதம் புத்தக விமர்சனம்
அரசியல்வாதியும் அவர் வளர்த்த பூனையும் குமரி எஸ் நீலகண்டன்
ஊழிக்காலம் எம்.ரிஷான் ஷெரீப்
மெய்ப்பொருள் மிருணா
கவிதை நந்தாகுமரன் (2 முறை ஒரே கவிதை பிரசுரமாகிவிட்டது)

Monday, September 13, 2010

கவிதைகளின் காலம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

You are here:Home கவிதைகள் கவிதைகளின் காலம்
கவிதைகளின் காலம்
Posted by editor on September 11, 2010 in கவிதைகள் | 0 Comment

குமரி சு. நீலகண்டன்
Kumari_S_Neelakandan
”மா” பூ பூப்பதுபோல்
கவிதையின் காலங்களும்…


கவிதைகள் சில புளிக்கின்றன
இனிக்கின்றன
சில ஊறுகாயாய்
இலக்கியச் சோற்றுடன்
நாக்கை உரசிச் செல்கின்றன…


காலம் மாறி
பூத்த பூக்களும்
வண்டுகள்
வராத பூக்களும்
காற்றோடு
கரை கடந்த பூக்களும்
தரை விழுந்த பூக்களும்


வாடாத பூக்களுடன்
வாசம் பாடாத
பூக்களென
நிறைந்திருக்கிறது
இலக்கியத் தோட்டம்.

Friday, September 10, 2010

முதுமையெனும் வனம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday September 5, 2010

முதுமையெனும் வனம்

குமரி எஸ். நீலகண்டன்



முடிகளில் மூத்த
தலைமுடியினை முந்தி
மீசையில் நரை
உறைய ஆரம்பித்தது.
வெண்மை நுரை தள்ள
அசை போட்டுக்
கொண்டிருந்தது முதுமை.


தாடியில் நரை
ஓவியம் வரைந்தது.
இளமை ஆசைகள் மீசையில்
கருப்பு வண்ணத்தை
பீய்ச்சி விளையாடும்.


காலத்தின் பரப்பில்
கனிந்த கோலங்கள்
வரையும்.
தளர்ந்த உடலில்
இளமை நினைவுகள் தழுவும்.


தொடரும் நினைவுகளின்
நரம்புகளில்
இளமை முறுக்கேறும்
தாவிப் பாயும்
ஆடிப் பாடும்


உள்ளுக்குள் ஒரு காடு
பற்றி எரியும் அங்கே
முதுமைக்குள்
இளமை குளிர் காயும்


குமரி எஸ். நீலகண்டன்

Tuesday, September 7, 2010

தாத்தா தந்த கடிகாரம் - நவீனவிருட்சத்தில் வெளியானக் கவிதை

நவீன விருட்சம்

This Blog
Linked From Here
The Web

5.9.10
தாத்தா தந்த கடிகாரம்
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்



குமரி எஸ். நீலகண்டன்

எனது தாத்தா

இறக்கும் முன் ஒரு நாள்

அவரது ஓடாத

பழைய கடிகாரத்தை

எனக்கு பரிசாக

தந்துவிட்டு போனார்.

தாத்தாவின் இதயம் துடிக்கும்

அதை நான் மிகவும்

பத்திரமாக பாதுகாத்து

வருகிறேன்.

உலகம் போற்றும்

அந்த சிற்பி

தற்போது புதிதாய்

கவிதை எழுத

துவங்கி இருக்கிறார்

கவிதை பக்கம்

செல்லாதவர்களும்

தற்போது அவரது

கவிதையைப்

புகழ்ந்து போற்றுகின்றனர்.

கவிதையே போடாத

பத்திரிகைகளும் தற்போது

அவரது கவிதைக்காக

ஒரு பக்கம்

ஒதுக்கி உள்ளன.

நான் தற்போது அந்த

கவிதைகளையெல்லாம்

ஒரே ஒரு தடவை மட்டும்

படித்துவிட்டு

தாத்தா தந்த

அந்த கடிகாரத்தின்

அடியில் வைத்து

பாதுகாத்து வருகிறேன்

குமரி எஸ். நீலகண்டன்

Sunday, September 5, 2010

எஜமான விஸ்வாசம் - வல்லமை இணைய இதழில் எனது கவிதை

எஜமான விஸ்வாசம்

Posted on 04 September 2010

குமரி எஸ். நீலகண்டன்

எலியும் பூனையுமாய்
எஜமானனும்
எதிர்வீட்டுக் காரரும்..
சண்டைக்காரன் வீட்டில்
மீனைத் திருடித் தின்றுவிட்டு
பதுங்கி பதுங்கி
பவ்யமாய் வந்த பூனை
எஜமானனை
சந்தேகத்துடன் பார்த்தது
எஜமானனுக்கு தற்போது
தான் எலியா
பூனையா என்று

Monday, August 23, 2010

ஒரு ராஜகுமாரனின் கதை - திண்ணை இதழில் வெளியான கவிதை

PRINTER FRIENDLY

EMAIL TO A FRIEND

Sunday August 22, 2010

ஒரு ராஜகுமாரனின் கதை

குமரி எஸ். நீலகண்டன்


கடவுளின் ராஜ குமாரன்

கம்பீரமாய் குதிரையில்

வந்தான்

அழகான தேசத்தை

அவன் பெருமிதத்துடன்

பார்த்தான்

முதலில் அவனைச் சுற்றி

எல்லாம் சுகமாகவும்

சுறுசுறுப்பாகவுமே இருந்தன.

திருட்டு அவ்வளவாகத்

தென்படவில்லை.

சோம்பேரித்தனமாய் யாரும்

தெரியவில்லை.

அவலங்களும் அதிர்ச்சியும்

மனத்தளர்ச்சியுமாய்

எதுவும் படவில்லை.

அவன் பயணத்தில்

சில காலங்களில்

சில தூரங்கள்

கடந்திருப்பான்.

அதிர்ச்சி ஆரம்பமானது.

பசுமை உடுத்திய தாயின் மடியில்

பரிதாபத்துடன் பல உயிர்கள்

ஆடையில்லாமல்

அழுக்குத் துண்டில்

ஆடிக் கொண்டிருந்தன

பல உயிர்கள்

உலக வரைபடங்களெல்லாம்

நெஞ்சில்

நிதர்சனமாய் தெரிந்தன.

வறுமையில் தோய்ந்து

வழிந்தது துயரம்

முதலில் தனது

தலை கிரீடத்தை

எறிந்தான் ராஜகுமாரன்

தன் மேல் சட்டைகளை

அவிழ்த்து எறிந்தான்

தனது உடமைகளைத் திறந்து

அவர்களாகவே மாறி

அவர்களுக்காக

போரிடத் தொடங்கினான்

பருத்தி மரத்தின்

விதைகளைப் பறித்து

அதைப் பிரித்து

நூல் நூற்று

அவர்களுக்காய் ஆடை

நெய்து கொடுத்தான்

சுற்றியிருக்கும்

இயற்கையுடன்

கை கோர்க்க இனிதேக்

கற்றுக் கொடுத்தான்

அன்னியனின் விலங்குக்குள்

அனைவரும்

முடங்கிக் கிடந்தனர்

அவனிடம் கத்தியில்லை

குண்டூசி கூட இல்லை

நிராயுதனாய் சத்தியத்துடன்

சரித்திரப் போர்

தொடங்கினான்

அகிம்சையெனும்

ஆயுதமே அவனுக்கு

ஆரோக்கியமாய் தெரிந்தது.

கோபத்தை

அண்ட விடவில்லை

அவனின் கொள்கை

சிதையாமல் இருந்தது.

அகிம்சையின் வெப்பத்தில்

உருகினான் அன்னியன்

விலங்குகள் முறிய

வீர முழக்கமிட்டனர்

மக்கள்

ஆனந்தத்தின் உச்சத்தில்

ஆரவாரம் செய்தனர் மக்கள்

உற்சாக கோஷத்தில்

உலகமே அதிர்ந்தது

ராஜகுமாரன்

எச்சரிக்கை உணர்வுடன்

ஏதோ கூறினான்

வெறும் விடுதலை

மயக்கத்தில்

விழிக்கவே இல்லை

பல தலைகள்.

மக்களுக்காக

அறிவுறுத்திக் கொண்டே

இருந்தான் அவர்களின்

ஆரவாரத்தில் அவன் குரல்

அமுங்கிப் போனது

தனித்து விடப் பட்டான்

அவன் விடாமல் தனது

எச்சரிக்கை ஒலிகளை

எழுப்ப எழுப்ப

ஆரவார கூட்டத்திலிருந்து

ஒருவனின்

துப்பாக்கி குண்டுகள்

கோழையாய் அவனை

குதறிச் சிதைத்தன

ரத்தத்தின் கொதிப்பினை

அறிய குண்டுகள்

துளைத்திருக்க கூடும்

அகிம்சை சமாதியானது

ஆரவாரித்த மக்களெல்லாம்

இன்னொருவனுக்கு

அடிமையாயினர்.

ராஜகுமாரனை மறக்காத

அவர்கள் அவன்

பிறந்த நாள் இறந்த நாள்

எல்லாவற்றையும்

கொண்டாடினர்

காலங்காலமாய்

கடிதங்களிலெல்லாம்

தபால் தலையாய் அவன்

தலையைப் பதித்து

தவறாமல் அவனைக்

குத்திக் கொண்டே

இருந்தார்கள்

அவனுக்கு பிடிக்காத

மதுக் கடைகளின்

கல்லாப் பெட்டிகளிலெல்லாம்

மொட்டைத் தலையுடன்

அவன் முகங்களெல்லாம்

கொட்டிக் கிடந்தன

கொலை கொள்ளை

கூலிப்படையென

எல்லோர் கைகளிலும்

அவன் தலைகளையே

கூலிகளாய் பரிமாறினர்

அந்த ராஜகுமாரனைப் பற்றி

எல்லோரும் அவர்களின்

குழந்தைகளைக்கு சொல்லிக்

கொடுக்கிறார்கள் அவனையும்

அவனது வாழ்க்கையையும்

படிக்காமல் தெரியாமல்..

அந்த ராஜ குமாரனின்

பெயர் மகாத்மா என்றார்கள்




Copyright:thinnai.com 

Sunday, August 22, 2010

ஏக்கம் - தாமரை இதழில் வெளியான கவிதை

ஏக்கம்

குமரி எஸ்.நீலகண்டன்..

வெறும் கண், காது
மூக்கு மட்டுமல்ல
என் உருவம்.

என் தோற்றத்தைக்
காட்ட முயன்று
தோற்றுப் போகிறேன்
அவர்கள்
அவரவர் கண்களில்
என்னைப் பார்ப்பதால்.

அவர்கள் பார்த்த
என் உருவம்
என்னைப் போலவா
அவர்களைப் போலவா..

வரையச் சொல்லுங்கள்
ஓவியமாய்...
அவற்றில் ஒன்றாவது
என்னைப் போல்
நானாய்.

Thursday, August 19, 2010

தொண்டையின் துயரம் நவீன விருட்சத்தில் வெளியான கவிதை



நவீன விருட்சம்

17.8.10

தொண்டையின் துயரம்

இனிப்பான பலகாரத்திலிருந்து
உப்பில்லா உணவு
கொதிக்கிற தேனீரிலிருந்து
குளிர்ச்சியான ஐஸ் க்ரீம்
எதிர் வீட்டு பால் அப்பம்
எதிரி சுட்ட பணியாரம்
சந்த்ருவின்
பிறந்த நாள் கேக்
ஆஞ்சநேயரின்
வடைமாலையில்
பிரசாதமாய்
எஞ்சிய வடை என
எல்லா உணவு
பதார்த்தங்களையும் தொண்டை
அனுமதித்து விடுகிறது.
திடீரென
வயிற்றில் தள்ளு முள்ளு
கலவரம் அடிதடி என
நடக்கிற போது
வயிற்றிற்காக இரக்கம் காட்டி
கலவரக்காரர்களை
வாய் வழியாக
தண்ணீர் பீய்ச்சி
வெளியேற்றியும் விடுகிறது.

ஆனால் வினோதமாய்
ஒரு உறங்கும்
உண்மை மட்டும்
தொண்டைக்குள் முள்ளாய்
குத்திக் குத்திக் குதறுகிறது
வெளியேற இயலாமல்..

பொய் தவத்தில் புண்ணாய்
தொண்டை நாறிக்
கொண்டிருக்கிறது
பல நேரங்களில்

Wednesday, August 18, 2010

இரண்டும் ஒன்றானால்-வல்லமை இதழில் வெளியான கவிதை

இரண்டு ஒன்றானால்

Posted on 17 August 2010

குமரி எஸ். நீலகண்டன்

திசைகள்
இரண்டானாலும்
தசைகள் ஒன்று.

ஒருவர் பின்
போனால்தான்
இருவர் முன்
போக முடியும்.

இடையே பாவம்
இரண்டின் கன்று.

Thursday, August 12, 2010

ஈர்ப்பு - சென்னை ஆன்லைனில் வெளியானக் கவிதை

ஈர்ப்பு

  ஈர்ப்பு

குமரி எஸ். நீலகண்டன்

பற்றுதலுக்குப்
பிடிபடாமல் எல்லாமே
கை நழுவி விடுகிறது.

விழுந்ததில் உடையாத
சிலவற்றை
வழிப்போக்கர்கள்
எடுத்துச் சென்றார்கள்.

உடைந்தவற்றில்
ஒரு பகுதி
குப்பைத் தொட்டிக்குச்
சென்றிருக்க வேண்டும்.

உடைசல்களின்
எஞ்சிய குவியல்களை
ஒன்று சேர்க்கப் பார்க்கிறேன்
கைக்கு லாகவமாய்ப்
பற்றிக் கொள்ள.

பொருளுக்கேற்றாற் போல்
கைகள் வேண்டும்
பற்றிக்கொள்ள.

  ஈர்ப்பு
Jun 23, 2009

சத்திய பிரமாணம் - சென்னை ஆன் லைனில் வெளியானக் கவிதை

சத்திய பிரமாணம்

 சத்திய  பிரமாணம்

குமரி எஸ். நீலகண்டன்

எனக்குச் சுதந்திரம் வேண்டும்.
ஆனால்
எல்லோரும்
நான் சொல்வதையே
கேட்க வேண்டும்.

எல்லோரும் உழைக்க வேண்டும்.
ஆனால்
எனக்கு வியர்வை ஒவ்வாது.

உதவும் மனதே
உலகை உயர்த்தும்.
எல்லோரும் எனக்கு
உதவுங்கள்.

பாவம்! அவனுக்கு
ஏதாவது கொடுங்கள்!
என்னிடம் மட்டும்
எதுவும் கேட்காதீர்கள்.

உனக்காக உயிரையே
கொடுப்பேன்.
உறுதியாக வாக்கு
தருகிறேன்.

என்னிடம் ஒரு பலஹீனம்
வாக்குறுதிகள் மட்டும்
என் நினைவில்
இருப்பதே இல்லை.

 சத்திய  பிரமாணம்
Jul 21, 2009