Showing posts with label செய்தியும் கவிதையும். Show all posts
Showing posts with label செய்தியும் கவிதையும். Show all posts

Saturday, October 30, 2010

செய்தியும் கவிதையும் - ஆணுறையில் நவரத்தினங்கள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

செய்தியும் கவிதையும்


ஆணுறைக்குள் நவரத்தினங்கள்

குமரி எஸ். நீலகண்டன்

(நவரத்தினக் கற்களை ஆணுறைக்குள் வைத்து விழுங்கி, கடத்திய இலங்கை வாலிபர் சென்னையில் கைது என்ற செய்தியின் எதிரொலியாக எழுந்த படைப்பு)

நவரத்தினங்கள்

நவதானியங்களுக்குப் பதில்
நவரத்தினங்களை
உண்ணும் குருவிகள்.


நவரத்தினம் உண்ணும்
நாகராஜர்.


ஆணுறை இவருக்கு
மட்டுமல்ல இவரின்
நவரத்தினங்களுக்கும்
பாதுகாப்பாம்.


அவரோடு அவரின்
நவரத்தினங்கள்
வந்த வழியும் தனிவழி.


கழிவுகளை நோக்கி
கழிவுகளோடு வந்த
நவரத்தினங்கள்.

Monday, October 11, 2010

33 நிமிடத்தில் 50 ஆயிரத்து 33 மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை - செய்தியும் கவிதையும்

காஷ்மீரில் 33 நிமிடத்தில், 50 ஆயிரத்து 33 மரக்கன்றுகளை நட்டு, நேற்று கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. 


வெட்டும் மரங்களின்
சாதனைகளோடு 
நட்ட மரங்கள்
நடுங்கி புதைந்தன....
நட்டவர்கள் பெயர்கள்
சாதனையில்.
கன்றுகளின்  நாட்கள்
எண்ணிக்கையில்.....


குமரி எஸ். நீலகண்டன்

Sunday, October 10, 2010

உலகிலேயே மிகப்பெரிய டீ கப் - செய்தியும் கவிதையும்

உலகிலேயே மிகப்பெரிய டீ கப்பை தயாரித்துள்ளது இலங்கை


இலங்''கை''யில் உலக
சாதனைக் கோப்பையாம். 
தீ கோப்பையைச் 
சுமந்தவர்கள் கையில் 
ஆவி பறக்கும் 
அசுர உருவில்....
தேனீர் கோப்பை... 
அசையாமல் தேனீரை
அழகாக குடியுங்கள்..
அடியில் 
ஆயிரம் ஆயிரம்
மக்கள்....
கோப்பைக்குள் இருப்பது
தேநீரா அல்லது
எரிந்தவர்களின் நீறா...


குமரி எஸ். நீலகண்டன்

Saturday, October 9, 2010

சீன சிறைவாசிக்கு அமைதிக்கான நோபல் பரிசு - செய்தியும் கவிதையும்

சீன சிறைவாசிக்கு அமைதிக்கான நோபல் பரிசு....
சீன அரசு எதிர்ப்பாளரும், ஆட்சியைக் கவிழ்க்க போராட்டத்தைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவருமான லியூ ஷியோபோ (54) 2010ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குமரி எஸ். நீலகண்டன்

அமைதி பொதிந்த
பரிசுக்குள்
அமுங்கி இருப்பவை
சிதறுவதற்காய் சிறுக
இறுக்கப் பட்டிருக்கும்
சீரிய ஆன்மாக்கள்.
சுழற்றி அடிப்பதற்காய்
சுருங்கப் பொதிந்த
சுனாமி அலைகள்.
அழுதழுது
ஆவியாகிப் போன
அற்புத உயிர்கள்.

Friday, October 8, 2010

பிரபுதேவா நயன்தாரா ரகசிய திருமணம் - செய்தியும் கவிதையும்

பிரபு தேவா – நயன்தாரா ரகசிய திருமணம்!

 

ஆறுதலாய் தீண்ட
செஞ்சுடராய் அங்கு
படர்ந்து எரிந்தது
இன்னுமொரு
காதல் தீ.
சுட்டுக் கொண்டது
பழைய காதலும்
பழகிய மரபும்
பரிதாபமாய் குழந்தைகளும்...
இது காதல் தீயா....
குப்பைகளின் நெருப்பா


குமரி எஸ். நீலகண்டன்

Thursday, October 7, 2010

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் - செய்தியும் கவிதையும்

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு



ஆழ்ந்த அறிவால்
அறிவியல் ஆய்வால்
புத்துலகங்கள்
கண்களில் பூக்க
வக்கிரப் பார்வையுடன்
வர்த்தக அசுரர்கள்
எரியும் விழிகளில்
சருகான பசுமை...
குமரி எஸ். நீலகண்டன்

Wednesday, October 6, 2010

மின் திருட்டைத் தடுக்க ஆலைகளில் சோதனை - செய்திக் கவிதை

மின் திருட்டைத் தடுக்க ஆலைகளில் சோதனை: முதல்வர் உத்தரவு

 மின் திருட்டைத் தடுக்க
ஆலைகளில் சோதனையாம்
சோதனையைத் தடுக்க
ஆலையைச் சுற்றிலும்
மின் வேலியாம்
திருடும் மின்சாரத்திற்கு
உருட்டு கட்டைகள்
உட் பாதுகாப்பு.

குமரி எஸ். நீலகண்டன்

Tuesday, October 5, 2010

செய்தியும் கவிதையும்- காவலர் தேர்வில் தில்லுமுல்லு

     
காவலர் உடல் திறன் தேர்வில் தேங்காய் சரட்டை வைத்து வாலிபர் "தில்லுமுல்லு'
சேலம் : சேலத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலருக்கான உடல் திறன் தேர்வில், உயரத்துக்காக தலையில் தேங்காய் சரட்டை வைத்து, "தில்லுமுல்லு' செய்த வாலிபர் மீது, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.




காவல் பணியில்
காதல் அவருக்கு ....
உடற் தகுதிக்கான
உயரம் போதவில்லை.
உயர்மட்ட ஆலோசனைக்குபின்
பொய்முடிக்குள்
கொப்பரை வைத்து
உயரம் கூட்டினான்.
மூளை வளர்ச்சி
போதவில்லையென்று
சிறையில் அடைத்தனர்
அவனை அதிகாரிகள்.
தலையில் தேங்காய்
வைத்தால் தென்னை
மரமாக இயலுமா...

குமரி எஸ். நீலகண்டன்