நீலகண்டனின் எழுத்துக்கள்
Monday, April 18, 2011
மெய்யும் பொய்யும் - வல்லமை இதழில் வெளியான கவிதை
மெய்யும் பொய்யும்
குமரி எஸ். நீலகண்டன்
பொய்யே
நெய்யாய் எரிய
உடலெங்கும்
பொய்யின் வியர்வையில்
புதைந்தவன் அவன்.
எப்போதும் பொய்யே
பேசும் அவன்
எப்போதாவது
உண்மை பேசுகையில்
பொய்யாய் போகும்
அவன் உருவமெனும்
மெய்.
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)