நீலகண்டனின் எழுத்துக்கள்
Monday, April 18, 2011
மெய்யும் பொய்யும் - வல்லமை இதழில் வெளியான கவிதை
மெய்யும் பொய்யும்
குமரி எஸ். நீலகண்டன்
பொய்யே
நெய்யாய் எரிய
உடலெங்கும்
பொய்யின் வியர்வையில்
புதைந்தவன் அவன்.
எப்போதும் பொய்யே
பேசும் அவன்
எப்போதாவது
உண்மை பேசுகையில்
பொய்யாய் போகும்
அவன் உருவமெனும்
மெய்.
‹
›
Home
View web version