நீலகண்டனின் எழுத்துக்கள்
Friday, March 2, 2012
இருளில் உருளும் மனம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை
இருளில் உருளும் மனம்
குமரி எஸ். நீலகண்டன்
இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.
வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.
‹
›
Home
View web version