ஆயிரம் வருடத்து மரப்பாச்சியும் அழகான 2011ம்
குமரி எஸ். நீலகண்டன்
வருடங்கள் வளர வளர
வளர்ந்து கொண்டே
இருக்கிறோம்.
உடலெங்கும் மின் ஒளியில்
பகட்டாய் பறக்கிறது பூமி.
காங்கிரீட் காடுகளில்
வாடாத பூக்களுடன்
பிளாஸ்டிக் தாவரங்கள்...
உயிர்களை உன்னதமாய்
காக்கிறோம்...
கொசுக்கள்.. வைரஸ்..
பாக்டீரியாக்களை
புதிது புதிதாய்
உருவாக்கியும் வளர்த்தும்...
வீட்டினுள் குளிரூட்டி
வெளியே அக்னி
வளர்க்கிறோம் .
பூமியின் அழுக்கான
கைகளின் வழி பணங்கள்
அவமானத்துடன்
அலைகின்றன
கட்டை பஞ்சாயத்தை
இன்னுமொரு கட்டை
பஞ்சாயத்தே தட்டி தனக்காய்
தீர்ப்பு சொல்கிறது.
ஆயிரம் வருடத்தில் பிறந்த
அழகான ஒரு மரப்பாச்சி பொம்மை
மிகுந்த சலிப்புடன்
குழப்பங்களின் குழைவினுள்
குதூகலமாய் வரும்
குழந்தை2011 ஐப் பார்க்கிறது
பரிதாபமாய்.....

mig algana kavithai
ReplyDeleteunmaiyum kuda
ReplyDeleteshinthanaiyin shirppy thangal
ReplyDeletevalaga valamudan enrenrum
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇதையும் படிச்சி பாருங்க
உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்
நண்பன் அவர்களுக்கும் நணபர் சண்முக குமார் அவர்களுக்கும் நன்றிகளும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்
ReplyDeleteகுமரி எஸ். நீலகண்டன்